12/06/2018

எங்களை ஏன் புறக்கணித்தாய்?


உயிர்நீங்கும் வரை
உறவாடத்தானே
எங்களை நீ கைப்பற்றினாய்
பிறகு ஏன் புறக்கணித்தாய்?!

உன் இதயத்தின் அருகில்
இருக்க இடம் தந்தாய்...

உன் விரல்களுக்கிடையில்
விளையாடி இயங்க வைத்தாய்

உன் புன்னகை இதழ்களால்
எமை அன்போடு முத்தமிட்டாய்...

உன் எச்சில் ஈரத்தில்
எமை நனையவும் வைத்தாய்.

உன் கோபத்தின் உச்சத்தில்
எமைக் காயமும் படுத்தினாய்....

இத்தனையும் செய்துவிட்டு
எம்மை ஏன் புறக்கணித்தாய்?!

உதிரத்தைக் கொட்டித்தானே
உன் எண்ணத்தைப் பிரதிபலித்தோம்...
பிறகு ஏன் புறக்கணித்தாய்?!

இப்படி....
நான் தொலைக்கும்
பேனாக்களின் கேள்விக்கு
நான் என்ன விடை சொல்வேன்?!

✍️செ.இராசா

No comments: