20/06/2018

அதிகாலை


சுத்தமான பிராணவாயு
..........சுத்திவரும் காலை
சுத்தவெளி சக்திவந்து
..........சுறுசுறுப்புத் தருமே!

சப்தமின்றி ஊருசனம்
..........உறங்குகின்ற காலை
சப்தம்போட்டு பறவையினம்
..........சுத்திச்சுத்தி வருமே!

சந்திரனும் சூரியனும்
...........பணிமாற்றும் பொழுதே
சந்திரனால் வந்தமர்ந்த
...........பனிமாய்ந்து விடுமே!

சிந்திக்கின்ற மனிதமூளை
..........எந்திரிக்கும் பொழுதே
எந்திரத்தின் ஓசைகளும்
..........மெல்லமெல்ல எழுமே!

No comments: