09/06/2018

சென்னை


வந்தார் அனைவருக்கும்
வாழ்வளித்து வளம் தந்த
வள்ளல் நகரம்; சென்னை

கோடம்பாக்கம் வருபவரை
கோட்டைக்கு அனுப்பி வைத்த
கோமாளி நகரம்; சென்னை

எங்கேயும் எப்போதும்
எல்லோரையும் ஓட வைக்கும்
மாரத்தான் நகரம்; சென்னை

தொடரியின் நெரிசலிலும்
துயரம்போக்கி மகிழ்வு தரும்
கானா நகரம்; சென்னை

முத்தமிழ் இருக்கையிலும்
நாத்தமிழ் வேறு பேசும்
வித்தக நகரம்; சென்னை

தென்னிந்தியர் அனைவரையும்
மதராஸியெனச் சொல்ல வைத்த
மா நகரம்; சென்னை

No comments: