23/06/2018

சினம் 😡😡😡😡😡😡


சினமென்னும் குணத்தை அனுமதித்தால்
மனமென்னும் குரங்கு விழிப்படைந்து
மயக்கத்தில் கண்களை மறைத்துவிட்டு
மரணத்தின் வாசலைத் திறந்திடுமே!

சினத்தின் தாயென வீற்றிருக்கும்
மனத்தில் தோன்றிடும் ஆசைகளே
அடிமனப் பற்றாய் உருமாறி
அவற்றுள் தடைவர சினம்வருமே!

பாலை மாற்றிடும் உறைபோலே
பாழாய் வீழ்த்திடும் சினம்தானே
வஞ்சகம் என்றே உருமாறி
நஞ்சென மனத்தில் தங்கிடுமே!

சினத்தை நாமும் தவிர்த்திடவே
மனத்தை அதற்குப் பழக்கிடவே
தவத்தை நாளும் கடைபிடித்தே
வளத்தை சேர்த்திட முயல்வோமே!

No comments: