07/06/2018

ஏதேதோ கிறுக்கினேன்



ஏதேதோ கிறுக்கினேன்
ஆகா...அருமை....என்றீர்கள்
எழுத்தில் மெருகை ஏற்றினேன்
எங்கே நீங்கள் சென்றீர்கள்?

நானாக எண்ணிவிட்டேன்
நானும் ஒரு கவிஞனென்று..
நூல்கூட கோர்த்துவிட்டேன்
நானும் ஏதோ கவிஞனென்று...

முகநூலைப் புரிந்துகொண்டேன்
மதுபோன்ற போதையென்று...
இப்போது விழித்துக்கொண்டேன்
இதுவும் கடந்து போகுமென்று..

-அனைவருக்கும் நன்றி-

No comments: