18/06/2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்==செல்வி ரித்திகா



அன்பையே ஆதாரமாக்கி
ஆரம்பித்த மணவாழ்வில்
இடர்கள் சூழ்ந்தாலும்
ஈகையை நீர் விடவில்லை....

உண்மையான உன் வாழ்வில்
ஊறு நிறைய வந்தாலும்
எழிலரசி கிருத்திகாவால்
ஏறுபோன்று நடை நடந்தாய்....

ஐங்கரனின் அருளாலே
ஒரு மகனும் ஒரு மகளும்
ஓவியமாய் பெற்றெடுத்து
ஓளதாரியப் புகழ் பெற்றாய்...

அஃதெல்லாம் சிறப்பு என்றால்
அஃதைவிட வெகு சிறப்பு
இன்று நீ செய்ததன்றோ?!!!

ஆம்....

இருக்கும்போது ஈவதிலே
இல்லை ஐயா சிறப்பு
இல்லாதபொழுதினிலும்
ஈந்தாயே அது சிறப்பு....

அன்பு மகள் ரித்திகாவின்
அழகான பிறந்தநாளில்
பள்ளிக் குழந்தைகளின்
பசிபோக்க உணவளித்து

எட்டாவது பிறந்தநாளில்
எட்டா உயரம் தொட்டுவிட்டீர்
எப்படி நான் வாழ்த்திடுவேன்?!!
எப்படி நான் போற்றிடுவேன்?!!

தமிழாலே வாழ்த்துகின்றேன்!
தமிழாலே வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் மாப்பிள்ளை Ramesh M
வாழ்க வளமுடன் தங்கை கிருத்திகா
வாழ்க வளமுடன் செல்வன் ரதிஷ்
வாழ்க வளமுடன் செல்வி ரித்திகா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

மருமகள் #ரித்திகா!

No comments: