30/06/2018

நிலா



சுட்டெரிக்கும் சூரியனின்
கட்டழகுக் காதலியே- உன்
வட்டமுகப் பார்வையிலே
வெட்க ஒளித் தெரியுதடி...

பகலெல்லாம் மோகத்தில்
பகலவனைக் காதலித்தும்- சில
இரவெல்லாம் மனமுருகி
உருவம் ஏன் தேயுதடி?!

பிரிவென்றால் என்னவென்று
பிறருக்குச் சொல்லிடவா- ஒரு
மாதத்தில் ஒரு நாளில்
மறைந்தே நீ வாழ்கின்றாய்?

வாழ்வென்றால் என்னவென்று
வையகத்தார் கற்றிடவா- நீ
தேய்பிறையாய் வளர்பிறையாய்
தேகத்தை மாற்றுகின்றாய்?!

✍️செ. இராசா

No comments: