25/06/2018

இளைப்பாற ஓர் நிழல் -களஞ்சியம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை


உலகத்தில் பிறந்துள்ள
உயிரினங்கள் அத்தனையும்
இளைப்பாறும் ஓர் நிழலாய்
இருக்கின்ற ஓர் இறையே....

இன்பத்தை அறிவதற்கு
துன்பத்தைக் கொடுத்தாயா?- இல்லை
இறையுன்னை அறிவதற்கு
இன்னலைத் தந்தாயா?!

ஒன்று உயிர்வாழ
ஒன்றினைப் படைத்தாயா?- இல்லை
ஒன்றான உனையறிய
ஒன்றொன்றாய்ச் செய்தாயா?!

மனிதம் உயர்வடைய
மதங்கள் தந்தாயா?!- இல்லை
மனிதன் மீண்டு எழ
மனதில் நினைத்தாயா?!

இளைப்பாறும் ஓர் நிழலாய்
இருக்கின்ற ஓர் இறையே- நீ
இசைந்தாடும் ஓர் கவியாய்
இதயத்தில் இருந்திடுவாய்!

No comments: