29/06/2018

எது உண்மை?


கண்ணில் காணும் காட்சியெல்லாம்
உண்மை என்றே நம்பாதே!- அஃதே
கண்ணில் காணாக் காட்சியெல்லாம்
கற்பனை என்றே கதைக்காதே!

விண்ணில் விண்மீன் இல்லையெனில்
விடுமுறை சென்றதாய் எண்ணாதே!- அஃதே
உன்னுள் உள்ளொளி இல்லையெனில்
உள்ளதைப் பொய்யென உரைக்காதே!

காதில் விழுகிற வார்த்தையெல்லாம்
ஓதிடும் வேதமாய் நம்பாதே!- அஃதே
காதில் விழுகா வார்த்தைகளும்
காற்றில் தவழ்வதை மறக்காதே!

இறைவனை மறுத்திடும் பெரியோர்களும்
இறைநிலை என்பதை அறிந்திடுவீர்!-அஃதே
இறைவனே இல்லை என்போரும்
இதைப்பற்றி கவலைகள் கொள்ளாதீர்!

No comments: