19/06/2018

ஒரு குழந்தையின் கேள்வி


நீ பிறந்த காரணத்தை
நீயே அறியுமுன்னே
என்னை ஏன் பெற்றடுத்தாய்
சொல்லு தந்தையே?

குடிக்கவும் கஞ்சி இல்லை
படிக்கவும் பணம் இல்லை
குடிக்கமட்டும் காசிருக்கா
சொல்லு தந்தையே?

துணிக்கும் வழி இல்லை
துணைக்கும் யாருமில்லை
உனக்குமட்டும் குடிக்கனுமா
சொல்லு தந்தையே?

No comments: