28/06/2018

அஞ்சாமை


அஞ்சிஅஞ்சி வாழ்வதிலே
....................என்ன இருக்கு?
அஞ்சாமல் வீழ்ந்தாலே
....................அதுவே சிறப்பு

கெஞ்சிகெஞ்சி இரப்பதிலே
...................என்ன இருக்கு?
கெஞ்சாமல் இறந்தாலே
...................அதுவே சிறப்பு

கொஞ்சிப்பேசி நஞ்சைத்தரும்
.....................உலகை நினைத்து
வஞ்சினத்தை நெஞ்சுரத்தால்
......................தடுத்து நிறுத்து!

அஞ்சுபொறி அடக்கிநீயும்
....................உன்னைச் செதுக்கி
அஞ்சாமை குணத்தோடு
....................வாழ்வை நடத்து!

எஞ்சியுள்ளத் தொப்புள்கொடி
....................உறவை நினைத்து
வஞ்சகத்தால் வென்றவர்க்கு
....................பாடம் புகட்டு!

No comments: