10/06/2021

PICTURE OF HAPPINESS ---- மகிழ்வைத் தெரிவிக்கும் படம்



ஒழுகும் குடிசைதான்;
........அதனாலென்ன?
உடைந்த கட்டில்தான்;
..........அதனாலென்ன?
ஒற்றைப் போர்வைதான்;
...........அதனாலென்ன?
பூனையும் நாயும்கூட
...........அதனாலென்ன?
கோழியும் குருவியும்கூட
............அதனாலென்ன?
அட.. வாங்க நீங்களும்கூட
............அதனாலென்ன?
.
✍️செ. இராசா

குறிப்பு;

ஒரு சமயம் நஸீம் கிக்மத் என்ற புகழ்பெற்ற துருக்கிக் கவிஞர் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக தன் ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் கேட்டுக்கொண்டாராம். அதற்கு அவர் வரைந்த ஓவியமே இந்த ஓவியம். பார்த்தவுடன்‌.... மனம் அப்படியே இலகுவானது.
ஆகா...ஆகா... இதுவல்லவோ ஓவியம்?

வார்த்தைகள் இல்லா அழகியக் கவிதையாய் மொழியும் உன்னத ஓவியம் பாருங்கள்....

No comments: