28/06/2021

சொல்லாடல் செய்தே சுருட்டிய

 


முகநூலை வலம் வந்தபோது கண்டப் பதிவுகளில் பெரும்பாலானப் பதிவுகள் சாதிய, இனப்பிரிவினைப் பதிவுகளாகவே இருந்தது கண்டு வேகமாய் எழுந்த கேள்விகளே இவை....

யாதுமே ஊரென்ற எம்பாட்டன் கூற்றிலே
ஏதுமே இங்கில்லை ஏன்?!
(1)

சாதிகள் இல்லையென்று சாடியவன் கூற்றையும்
காதிலே போடலையே ஏன்?
(2)

ஒன்றியம் என்றெல்லாம் ஓதிடும் போக்காலே
என்னதான் வேண்டுமாம் இங்கு?
(3)

செந்தமிழ் நாட்டைத் திரா''விடம்' என்போரே
எந்தமிழ் நாட்டில்;நீர் யார்?!
(4)

சொல்லாடல் செய்தே சுருட்டிய கூட்டத்தின்
சொல்லிலே உள்ளதும் சூது
(5)

✍️செ. இராசா

(#மேதகு பாருங்கள்....ஒரு இனத்தலைவரின் மாண்பு தெரியும். ச்சும்மா வாய்ச்சவுடால் செய்தே வண்டி ஓட்ட வேண்டாம்)

No comments: