01/06/2021

எந்தையும் தாயும் எனையீன்ற அந்நாளில் என்னென்ன எண்ணினாரோ?

 

 


எந்தையும் தாயும்
எனையீன்ற அந்நாளில்
என்னென்ன எண்ணினாரோ? -உண்மையில்
என்னென்ன எண்ணினாரோ?

மண்டை பெருத்திட்ட
மாயக் குரங்கெனக்
கண்டதும் கத்தினாரோ?- இல்லைக்
கண்களைப் பொத்தினாரோ?

கண்மை நிறங்கொண்ட
காக்கா இனமென
அன்னத்தைத் தேடினாரோ- இல்லை
அண்டாமல் ஓடினாரோ?

மூக்கு முழியுள்ள
மூஞ்சியைக் கண்டதும்
மூக்கினைச் சிந்தினாரோ- இல்லை
மூர்ச்சையில் சிக்கினாரோ?

ஓவென்று கத்தியே
ஓங்கி ஒலித்ததால்
கோ-வென்று பேரிட்டாரோ- சரி
போவென்று பேரிட்டாரோ

✍️செ. இராசா

(இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள் அம்மா அப்பா)

No comments: