30/06/2021

நினைவுகளின் சுமை தாங்கி

 


நினைவுகளின் சுமை தாங்கிதானே
நீயும் நானும்?

யோசித்துப் பாருங்கள்...!!!

நினைவுகளைக் குறைத்து
நினைவுகளை நெறிப்படுத்தி
நினைவின்றி இருப்பதே தியானமென்றால்
நினைவுகள் மட்டும் போய்விட்டால்
நம்மை எங்கே வைத்திருப்பர்?

நினைவுகளே இல்லாமல் பிறந்து
நிகழ்வுகளின் இருப்பை நினைவாக்கி
நினைவுகளைச் சுமந்தபடியே வளர்ந்து
நினைவுகளை மறந்தபடியே மரணிக்கும்; இந்த
நினைவுகள் சுமக்கும் மனித வாழ்வில்
பிறக்கையில் தொடங்கிய நினைவை
பூஜ்யமாய்க் கொண்டால்
இறக்கையில் மறக்கும் நினைவும்
பூஜ்யம் தானே...
எனில் .
இந்த சூனியத்திற்குள்தான்
எத்தனை சூட்சம நினைவுகள்?!

ஆம்...
நினைவுகளின் சுமை தாங்கிதான்
நீயும் நானும்!

எனில்...
குப்பைகளைச் சுமக்காமல்
மலர்களைச் சுமக்கலாமே....

செ. இராசமாணிக்கம்

No comments: