27/06/2021

மழைத் தூவும் மேகம் உனைக் காணும் நேரம் நிறம்மாறும் உடன்தூறும்

மழைத் தூவும் மேகம்
உனைக் காணும் நேரம்
நிறம்மாறும் உடன்தூறும்
.......................தொடும் தேகம்
கேளாயோ அன்பே....நானென்றும் நீரே
தொட்டுத் துடைப்பேன் கண்ணீரே

பல காலமாய்ப் புரியாமலே
கானலாய் நானும்.... இருந்தேனே
பல காலமாய்ப் புரியாமலே
கானலாய் நானும்.... இருந்தேனே
கவிழ்க்கும் விழியாலே
காட்டு நதியானேன்..
கவிக்கும் மொழியாலே
கம்ப னடியானேன்
காதலே.... கோபம் கொள்ளாதே
ஆரோமலே......போதும் கொல்லாதே

பல நேரத்தில் அறியாமலே
பாவிபோல் நானும் நடந்தேனே
பல நேரத்தில் அறியாமலே
பாவிபோல் நானும் நடந்தேன்
இருந்தும் பொறுத்தாயே
இருக்கி அணைத்தாயே..
அன்பைப் பொழிந்தாயே
அள்ளி அணை------தாயே!
காதலே....தூரம் போகாதே
ஆரோமலே...போதும் கொல்லாதே

✍️செ. இராசா

No comments: