28/06/2021

அன்பிற்கும் உண்டோ

 


#அன்பிற்கும்_உண்டோ
***************************

காணாத கன்றொன்றைக்
.........கண்டுகொண்ட அவ்வேளைத்
தானாகப் பொங்கிவரும்
..........தாய்ப்பசுவின் கண்ணீர்போல்
அன்பானோர் வந்தவுடன்
..........ஆற்றொழுக்காய் ஓடிவரும்
அன்பிற்கும் உண்டோ அணை!

(1) #இருவிகற்ப_இன்னிசை_வெண்பா

தன்னின துன்பத்தைத்
..............தன்துன்பம் என்றுணர்ந்துத்
தன்னையே அர்ப்பணிக்கும்
................தன்மையை ஆராய்ந்தால்
அன்பீன்ற வீரம் அது!

(2) #இன்னிசைச்_சிந்தியல்_வெண்பா

தன்வீட்டார் வந்ததுமே
............தவ்விவரும் நாயினம்போல்
புன்னகைத்தல் அன்பின் மொழி!

(3) #குறள்_வெண்பா

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_165

No comments: