08/06/2021

விழியின் கணையால்




விழியின் கணையால் வினவும் கலையால்
மொழியின் சுவையால் முறுவல் நகையால்
பொழியும் கவியால் புதுமை நடையால்
கழியும் கணங்'கள்' களிப்பு

✍️செ. இராசா

#ஒருவிகற்ப_இன்னிசை_வெண்பா

(நான்கு அடிகளிலும் ஒரெதுகை கொண்டு இரண்டாம் அடியில் தனிச்சொல் இல்லாமல் வரும் வெண்பா)

#தூங்கிசைச்_செப்பலோசை

(இயற்சீர் வெண்டளைகளாய் அதாவது ஈரசைச்சீர்களான மாச்சீர் மற்றும் விளச்சீர் மட்டும் வந்தால் அவ்வெண்பாவின் ஓசை தூங்கிசைச் செப்பலோசை‌. இங்கே புளிமா மட்டுமே வந்துள்ளது)

No comments: