25/09/2020

SPB ஐயா அவர்களுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்

 

 

 

இறந்ததாய்ச் சொல்லுறாங்க ஐயா
இறக்குமா கானமென்றும் மெய்யா
இழப்பதற் கொன்றுமில்லை ஐயா-நீ
இறந்ததாய்ச் சொல்வதெல்லாம் பொய்யா
 
உன் புகழ் கூறிடா ஊரார்-இங்கு
உனக்கிங்கு ஈடென்றால் வேறார்
உலகமே அழகுது பாராய்- இங்கு
உனக்கிணை யாரிங்கு ஈடாய்
 
கவிதையை உயிர்பித்தாய் நீதான்‌-அந்தக்
கவிதைக்கும் இறப்புண்டா கூறாய்
இசைத்தமிழ் யாதென்றால் நீதான்-உந்தன்
இசைக்கிங்கு இழப்புண்டா கூறாய்
இசைக்கென்றும் மொழியில்லை ஐயா -இனி
இசைக்கிற மொழிஇசை இறையா?!
 
✍️செ.இராசா

No comments: