30/09/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-4---சகர வருக்கம்

 


#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_4
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#சகர_வருக்கம்

#சக்கர_நெறி_நில்_1
நன்னெறி தர்மத்தை நன்றாக உள்வாங்கி
அன்னெறியில் நிற்றல் அழகு

#சான்றோரினத்திரு_2
நற்சான்றாய் வாழ்கின்ற நல்லோரின் கூட்டத்தைச்
சுற்றமாய் ஆக்கியே சூழ்

#சித்திரம்_பேசேல்_3
அடுக்குத் தொடரில் அழகாய்ப் பேசி
கெடுக்கும் செயலை விடு

#சீர்மை_மறவேல்_4
சிந்தை மறவாத சீரான நல்லெண்ணம்
வந்திட வந்திடும் வாழ்வு

#சுளிக்கச்_சொல்லேல்_5
காட்டாறு பாய்வதுபோல் கண்டபடி பேசாதே
கேட்போர் முகம்சுளிப்பர் கேள்

#சூது_விரும்பேல்_6
சூதால்‌ வருவது சூதாலே போவதால்
சூதாட்டம் வேண்டாம் விடு

#செய்வன_திருந்தச்_செய்_7
செய்கின்ற செய்கை சிறிதாய் இருந்தாலும்
செய்வதை நன்றாகச் செய்

#சேரிடமறிந்து_சேர்_8
சேருமிடம் யாதென்று சிந்தித்து நன்றாகச்
சேருபவர் கொள்வார் சிறப்பு

#சையெனத்_திரியேல்_9
சீயெனச் சொல்வதுபோல் சேட்டைகள் செய்யாமல்
ஆவெனச் சொல்வதுபோல் ஆகு

#சொற்சோர்வு_படேல்_10
வாய்குளறிப் போனதுபோல் வந்ததெல்லாம் பேசாமல்
வாய்மையுடன் பேசட்டும் வாய்

#சோம்பித்_திரியேல்_11
சோம்பித் திரிகின்ற சொத்தையாய் வீற்றிருந்தால்
தேம்பி அழுவாய் தெளி

✍️செ.இராசா

No comments: