27/09/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-3, ககர_வருக்கம்

 


#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_3
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#ககர_வருக்கம்

#கடிவது_மற_1
சிடுசிடு வென்றே சிதறிடும் வார்த்தை
கடுமையாய்க் கொட்டும் விடு

#காப்பது_விரதம்_2
தொடங்கிய ஒன்றைத் தொடர்ந்து நடத்தித்
தடையின்றிச் செய்தல் தவம்

#கிழமை_பட_வாழ்_3
உரிமையாய் எண்ணி உலகத்தில் வாழ்ந்தால்
உரிமையாய் மாறும் உலகு

#கீழ்மை_அகற்று_4
கீழ்நிலை எண்ணங்கள் கீழேயே தள்ளுவதால்
ஆழ்நிலையில் கீழ்மை அகற்று

#குணமது_கைவிடேல்_5
நாளும் தவறாமல் நல்லகுணம் மாறாமல்
வாழும் முறைமையிலே வாழ்

#கூடிப்_பிரியேல்_6
கூடிப் பழகியபின் குற்றங்கள் சொல்லிமனம்
வாடிப் பிரிதல் வலி

#கெடுப்ப_தொழி_7
கெடுக்க நினைத்தால் கெடுதியே நேரும்
விடுவிடு தீதை விடு

#கேள்வி_முயல்_8
செவிதிறந்து கேட்போர்க்கேச் சேர்கிறது ஞானம்
செவியிரண்டை நன்றாய்த் திற

#கைவினை_கரவேல்_9
கற்றிட்ட கைத்தொழிலை கற்கவே இல்லையென
உற்றார்முன் கூறல் விடு

#கொள்ளை_விரும்பேல்_10
கொள்ளை அடிப்பதிலே கோடி வருமெனினும்
கொள்ளை விருப்பம் விடு

#கோதாட்_டொழி_11
சூதாட்டம் ஆடியே சொத்தினைச் சேர்த்திட்டால்
பாதாளம் கிட்டும் விடு

#கௌவை_அகற்று_12
கிசுகிசு வேண்டியே கிண்டலாய்க் கூறல்
அசுத்தம் அதனை அகற்று

✍️செ.இராசா

No comments: