19/09/2020

மிருகக்காட்சி சாலையில்

 


மிருகக்காட்சி சாலையில்
பயங்கர சப்தம்...
கண்கூசும் மின்னொளிகள் வேறு
கம்பிகளுக்கு வெளியே எட்டிப் பார்த்தது
உள்ளே உலவும் மிருகங்கள்..

உறங்கிய விலங்குகளுக்கு
உயிர் பயம் தொற்றியது..
மீண்டு(ம்) வந்த விலங்குகளைக் கண்டு..

✍️செ. இராசா

(எந்த விலங்கும் கை நீட்டி உணவு கேட்கவில்லை‌. நம் முந்தைய பரிணாமத்தைத் தவிர.....ஐயகோ)

#அல்கோர்_குடும்பப்_பூங்காவில்_எடுத்தது

No comments: