09/09/2020

அன்புத் தம்பிக்கு....

 


 #அன்புத்_தம்பிக்கு....

எழுத்து நாம் இளைப்பாறும் இடம்
எழுத்து நம்மை உயிர்ப்பிக்கும் வரம்
எழுத்து நம் சுமைகுறைக்கும் சுகம்
எழுத்து நம் சுவைபெருக்கும் பலம்

எழுத்து நம்மை எழுப்புகின்ற விடியல்
எழுத்த நம்மைத் தாலாட்டும் இரவு
எழுத்து நம்மை இயக்குகின்ற இதயம்
எழுத்து நம்மில் இயங்குகின்ற சுவாசம்

எழுதுவோம்..
எழுதுவோம்...
எழுதிக்கொண்டே இருப்போம்...
யாரும் பார்க்க வேண்டி அல்ல..
யாரையும் தூற்ற வேண்டியும் அல்ல...

மலர்களைப்போல் மணம் திறக்க..
மழலையைப்போல் தினம் பிறக்க..

மல்லிகைப்பூ என்றால் மகிழ்ச்சி
காகிதப்பூ என்றால் கவர்ச்சி..
அரும்பூ என்றால் நெகிழ்ச்சி
வெறும்....."ப்ப்பூ" என்றால் முயற்சி

அவ்வளவுதானே....

எழுதுவோம்...

✍️செ. இராசா

(எழுதினால் உயரத்திற்குப் போகலாம் என்றேன்......இப்ப நான் உயரத்தில் இருந்துதான் எழுதுகிறேன் என்கிறார் என் பையன்...😀😀😀)

No comments: