21/09/2020

இன்னும்...இன்னும்

 


 ❤️❤️❤️💛💛💛🌀💛💛💛❤️❤️❤️

நீண்ட விடுப்பின்
............கடைசி நாளைப்போல்...
தொடர் நாவலின்
............இறுதி அத்தியாயம் போல்..
முடிவை நெருங்கும்
.............முக்கிய கவிதையைப்போல்...
அந்தத் தருணத்தின்
.............அந்த(ம்)..... நேரம்தான்
இன்னும் இன்னுமென...
இன்னும் சுவாரசியமானது..

இந்த எண்ணக் கிளர்ச்சி
என்னக் கிளர்ச்சியோ?!!
மெல்லினமாய் உருவாகி
இடை இனமாய் தடம் மாறி
வல்லினமாய் முழங்கியபின்
வந்து-நீர் வீழ்ச்சியாகிறதே..

இங்கே...
தொல்காப்பியம் தோற்கும்
நன்னூல் நாணும்..
ஆம்..
போதும் என்றாலும்
போ... என்றாலும்
சீ என்றாலும்
விடு என்றாலும்
பொருள்வேறு வேறு..
புரிந்தோர் வெல்கின்றார்...
புரியாதோர் புலம்புகின்றார்...
இன்னும்...இன்னும்...

❤️❤️❤️💛💛💛🌀💛💛💛❤️❤️❤️

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_129
#தமிழ்ச்சோலை

No comments: