07/09/2020

இறவாப்புகழ், இன்னிசைக்_கலி_வெண்பா

 


அறத்தினால் ஈன்றதை அப்படியே மீண்டும்
அறத்திற்கே செய்யும் அறவான்கள் போலே
படித்ததால் வந்தப் பகுத்தறிவை மீண்டும்
படிப்பிக்க எண்ணிடும் பண்பாளர் எல்லாம்;
 
வருவார்கள் வந்து மனமுவந்து நன்றாய்த்
தருவார்கள் தத்தம் தமிழ்ச்சோலை என்றே
கவிதைகள் செய்து களிப்புடன் ஏற்றிக்
குவிக்கிற நேரம் குதூகலம் தந்தால்
 
மடமட வென்றே மழையினைப் போலே
படபட வென்றே பொழிகிற பேரில்
#திருஞானம் ஐயா தெளிவுடன் செய்த
அருங்கவி எல்லாம் அமரகவி ஆகி
 
திருக்குறள் போலே திருப்புகழ் கிட்ட
விரும்பியே தந்தோம் கவி!
 
✍️செ. இராசா

No comments: