28/09/2020

அளவறிந்து கொடு

 


வழங்கும் வரைக்கும்
வள்ளல் எனும் வாய்தான்
வழங்குவது நின்றால்
வாரி வழங்கும்...
வாய்க்குவந்தபடி

இருப்பதைத் தந்துவிட்டு
இருப்பின்றி இருப்பதல்ல கொடை;
இருப்பின் அளவறிந்து
இயன்றதைத் தருவதே கொடை..

பாத்திரம் காணானின் ஈகையும்
பா-திறம் காணானின் பாராட்டும்;
கொடுத்தாலும் நிறையாத
கொடுங்கோல் கணக்கே...
ஆம்..
கொடு... #அளவறிந்து_கொடு

✍️செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_130

No comments: