04/09/2020

அவனும் அவளும் பூங்காவில்


 

வெயில் உறைக்கவில்லையா என்றாள்
இயற்கை உரைக்கிறதே என்றான்..
 
உயர்திணைகள் இல்லையே என்றாள்
உயிர் திணைகள் உள்ளதே என்றான்..
 
எதைத் தேடுகிறீர்கள் என்றாள்
என்னைத் தேடுகிறேன் என்றான்..
 
புரியவில்லை என்றாள்
புரிந்தால் சொல்கிறேன் என்றான்...
 
✍️செ.இராசா

No comments: