09/09/2020

#பச்சைத்தமிழ்_வெற்றித்திருமகன்

#பாடல்

.... பக்கம்வரும் சங்கத்தமிழ்மகன்
........தெற்குக்குலச் சிங்கப்பெருமகன் 
இவன்தானே...
 
தக்கத்தக தங்கக்குணமகன்
.....தித்தித்திட வந்துத்தருபவன்
.......பட்பட்டென‌ தட்டிக்கொடுப்பவன்
அவன்தானே...
 
எங்கும்இடர் கண்ணில்படுகையில்
.....அங்கேசுடர் என்றேஎழுகிற
........அன்பின்மழை அண்ணன்மனமென
அறிவீரோ..
 
இன்றும்சிலர் இன்னல்தருகையில்
.....சிந்தும்இவன் சின்னக்குறுநகை
.......தன்னில்குளிர் தண்ணீர்விடுவதைத்
தெரிவீரோ‌..
 
பார்த்தால் போதுண்டா பத்திக்கும் நெருப்பு
பழகிப் பார்த்தாக்க பாசந்தான் இருப்பு
அஞ்சா நெஞ்சன்டா ஆட்டாத வால
அன்பில் கர்ணன்டா தந்தீனாத் தோள..
 
தேருடா பாருடா தேடிவரும் சாமிடா
யாருடா கூறுடா எங்கண்ணன் மாசுடா
சீறுனா சிங்கன்டா செய்யனுமா சீனுடா
ஏறித்தான் பாருடா ங்கொய்யால வாங்கடா
 
✍️செ.இராசா

No comments: