04/09/2020

சிந்தித்தால் வந்தாடி என்னுள்

சிந்தித்தால் வந்தாடி என்னுள்

சந்திக்கும் செந்தாமரை
தித்திக்கும் உன்பாடல் போதை
சிந்தித்தே நீ பாடடி
 
என்னுள்ளே என்னோடு சேர்ந்தாய்
நான் என்றால் நீ அல்லவோ
என்றைக்கும் ஒன்றான உறவினை
தீ என்றால் ஊர் நம்பி விடுமோ
மெய் நிற்கும்
பொய் சாகும்..
என்றைக்கும் நீ நம்பு இதனை
சோகத்தால் மாறாது எதுவும்.
 
பண்ணுக்குள் ஒன்றான சந்தம்
வீண் என்றால் யார் நம்புவார்
உள்ளுக்குள் ஒன்றான உறவினை
யார் சொன்னால் ஏன் நம்ப வேண்டும்
அன்போடு...உஉஉ
உறவாடு..உஉஉஉ
எப்போதோ நாம் போட்ட முடிச்சு
என்றைக்கும் நாம்வாழ வாழ்த்தும்
 
சிந்தித்தால் வந்தாடி என்னுள்
சந்திக்கும் செந்தாமரை
தித்திக்கும் உன்பாடல் போதை
சிந்தித்தே நீ பாடடி
 
Optional;
 
(பண்ணுக்குள் சேராத சந்தம்
தேன் என்றால் யார் நம்புவார்
உள்ளுக்குள் ஒட்டாத உறவினை
வாழ் என்றால் யார் வாழ முடியும்)
 
செ. இராசா

No comments: