02/05/2020

காலையில் எழுந்திருக்க அலாரம்




காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்துப் படுப்போர்கள் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கொண்டு நான்காக வகுக்கின்றார் கௌர் கோபால்தாஸ் சாமிகள்.

1. அலாரம் அடிக்கும் போது அடிப்பதுகூடத் தெரியாமல் தூங்குபவர்கள் #SLEEPERS என்கிறார்.

2. மறுபடியும் SNOOZ போட்டு இரண்டு மூன்று முறை தள்ளிப் போட்டுப் பின்னர் எழுபவர்கள் #SNOOZERS என்கின்றார்.

3. அலாரம் அடித்தவுடன் எழும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தூங்குபவர்கள் #FALLERS என்கின்றார்.

4. அலாரம் அடித்த வேகத்தில் எழும்பித் தன் கடமையாற்றப் போகின்றவர்கள் #WAKERS என்கின்றார்.

இந்த நான்கில் எந்த வகையில் இருக்கின்றோம் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அந்த அலாரம் என்பது காலம் நமக்கு உணர்த்தும் நல்லது கெட்டது என்று வரும் அனைத்து சமிக்ஞைகளையும் அடக்கியதாகும். அதை நாம் எப்படி உள்வாங்கி நடக்கின்றோம் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பதை நன்றாக உணர்வோமாக

வாழ்க வளமுடன்!!

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

காலம் கடந்துதினம் காரியங்கள் செய்பவரைக்
காலம் கழுவிவிடும் கை

✍️செ. இராசா

No comments: