22/05/2020

அன்பே..அமுதே.. ஐ லவ் யூ








அன்பே..அமுதே.. ஐ லவ் யூவென
அவனையும் அறியாமல் உளறினான்
அவள் யாரென்று
அருகிலிருந்தவள் அலறினாள்...
அதகளமானது அவர்களின் இரவு..

சத்தியம் செய்து
சமாதானம் செய்தவன்
நித்திரை சென்றுவிட்டான்..

பாவம்..
அவன் கண்ட கனவு மட்டும்
உறங்கவே இல்லை....
அவன் மனைவியைப் போலவே

✍️செ.இராசா

No comments: