07/05/2020

பொன்னியின் செல்வன்



செப்பேடும் கல்வெட்டும்
செப்பிய வரலாற்றை
கற்பனைத் தேருக்குள்
சொற்பதக் குதிரை பூட்டி
#அமரர்_கல்கி செய்த
அற்புதப் புதினத்தை
அடிஅடியாய் உள்வாங்கி
அடியேன் பயணித்தேன்!


அப்படியே மெய் மறந்து
எப்படியோ உயிர் பெற்றேன்!

"#பொன்னியின்_செல்வன்" என்று
பொன்னான தலைப்பிட்டு
நாயகன் யாரென்றால்
நாயகன் அவரல்ல...
உடன் வரும் பாத்திரமாய்
உலா வரும் நாயகனாய்
வருவோர் யாரென்றால்
வாணர்குல #வந்தியத்தேவன்...

ஏரிக்கரை தொடங்கி
எரிக்கரை முடியும்
அந்த வந்தியத்தேவனின்
அத்தனைக் குதிரைகளும்
எப்போதோ அடங்கினாலும்
அதன் காலடி ஓசைமட்டும்
இன்னும் கேட்கிறது!
டொக் டொக் டொக்......
--இராசா-

(சில பல குறிப்புகளை வைத்துக்கொண்டு இராஜராஜச் சோழன் காலத்திற்கே அழைத்துச் சென்ற கதையமைப்பு. மிகவும் பிரம்மிப்பானது. நிறையமுறைக் கேள்விப்பட்டாலும் புதினம் படிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தினால் "பொன்னியின் செல்வன்" படிக்காமல் இருந்தேன். இப்போதுதான் முடித்தேன். தமிழக வரலாற்றில் ஏன் இந்நாவல் அதிகம் பேசப்பட்டது என்பதற்கான காரணத்தையும் அறிந்தேன்.
கூறியது கூறல் குற்றம் என்ற ரீதியில் பார்த்தால், பல இடங்களில் அந்தக் குற்றம் இல்லாமல் இல்லை. இருப்பினும் ஐந்து வருடங்கள் தொடர்கதையாக வந்த புதினம் என்பதால், அது தேவைப்பட்டது போலும். மற்றபடி "பொன்னியின் செல்வன்" போன்ற நாவல்கள் காலத்தின் கட்டாயமே,,,,,,,,,,,,,,,,,,ஆம், கட்டாயம் அனைவரும் பயணிக்க வேண்டிய புத்தகமே)

No comments: