23/05/2020

நீ.... நீயேதான்..

உன்னை...
மானே தேனே என்றால்
நானே..சிரித்திடுவேன்...
நிலவே மலரே என்றால்
நீயும்.... சிரித்திடுவாய்

அறிவேன்‌‌...
உன்னை அளக்க
எச்சில் உவமைகள்
எப்போதும் உதவாதென..
உன்னை விளக்க
மொழிகள் எல்லாம்
மௌனம் சாதிக்குமென...

ஆம்....

நீ
பழைய பிரம்மனின்
புதிய முயற்சி
இந்த
ஏழைக் கவிஞனின்
இன்ப அதிர்ச்சி..

நீ....
நீயேதான்..

✍️செ. இராசா

No comments: