01/05/2020

கவிராகம் தொடங்கி 1 வருடம் ஆகியது - மே தின நல்வாழ்த்துகள்


பாடுவோமே நண்பா பாடுவோமே
பாட்டாளி தினமின்று பாடுவோமே
கூடுவோமே நண்பா கூடுவோமே
கூட்டாளி நலங்காக்க கூடுவோமே


வாய்ப்பூட்டை எந்நாளும் உடைப்போமே
வாய்வள்ளல் யாரெல்லாம் உரைப்போமே
வேர்விட்டோர் யாவர்க்கும் சொல்வோமே
வேரறுக்கும் நல்லோராய் வாழ்வோமே

காலத்தை சரியாகக் கணிப்போமே
கானங்கள் வழியாக கதைப்போமே
நக்கீரர் போலென்றும் இருப்போமே
நடுநிலை எப்போதும் காப்போமே

✍️செ. இராசா

இன்றோடு கவிராகம் தொடங்கித் தங்களின் பொன்னான ஆதரவில் 1 வருடம் ஆகியது உறவுகளே....

No comments: