20/05/2020

வரிகள் இல்லாமலே





வரிகள் இல்லாமலே
வாசிக்க முடிகிறது
அவள் விழிகள்
(1)

தவம் செய்யாமல்
முக்தி கிடைக்கிறது
மோனப் பார்வையில்
(2)

நிகழ் காலம்
ஸ்தம்பித்து விட்டது
ஒற்றைப் பார்வையில்
(3)

✍️செ. இராசா

No comments: