22/05/2020

மறந்தால் என்னாவோம்?



விடியலைத் தருகிற கதிரவனும்
.......விடுமுறை கேட்டால் என்செய்வோம்?
இடிமழைப் பொழிகிற இந்திரனும்
.......இடிவரி போட்டால் என்செய்வோம்?
துடிப்பினைத் தொடர்கிற இருதயமும்
....துடிப்பதைத் துறந்தால் என்னாவோம்?
படிப்பினைக் கொடுக்கிற அனுபவமும்
...படிப்பதை மறந்தால் என்னாவோம்?

✍️செ.இராசா

No comments: