25/05/2020

உன் மெய்க்கு உயிர்கொடு




கடிகாரங்கள் ஓடவில்லை..
கற்கண்டுகள் இனிக்கவில்லை
கானங்கள் கேட்கவில்லை
காட்சிகள் நகரவில்லை
கவிதைகள் ருசிக்கவில்லை; ஏன்?
கடவுளும் பிடிக்கவில்லை; ஆம்
நீ இல்லாத நாட்களில்
'நான்' இருந்தால் தானே....

எங்கே கற்றாய் இக்கலையை?
உடலை உலவவிட்டு
உயிரைக் கொள்(ல்)கிறாயே..
கொலைகாரா....
எப்போது உயிர்பிப்பாய் இச்சிலையை?!
தலையில்லா முண்டம் போல்
தலை இல்லா முண்டம் நான்...

வா...வந்து
உண்மைக்கு உருகொடு
உன் மெய்க்கு உயிர்கொடு

✍️செ.இராசா

No comments: