18/05/2020

நீருக்குள் தீப்பந்தம்


மதுஅருந்தப் பறக்குமே வண்டு; ஆனால்
மதுவருந்தப் பறக்குதே மனிதம்
குடி உயர உயருமே அறம்; ஆனால்
குடி உயர விழுகுதே சிரம்!

பிறர் சாரா பிராந்தியமாய்‌ நேற்று
பிறர் சாராயம் பிராந்தியுமாய் இன்று!
கள்ளுண்ணான்மை கடைபிடித்தார் அன்று
கள்ளுண் ஆண்மை கடைவிரித்தார் இன்று

நீரின்றி வாழ்வேது மீனுக்கு; சோம
நீரின்றி வாழ்வுண்டா பாருக்கு?
நீரினுள் மலருமா தீப்பந்தம்?!- சோம
நீரினால் மலருதே தீ-பந்தம்!

✍️செ. இராசா

No comments: