24/05/2020

சாதி கானா



எஸ்ஸி எஸ்டின்னு சொல்லாதீங்க டா
எங்கள ஜாதிக்குள்ள தள்ளாதீங்கடா
பிஸி எஃப்சியின்னா உசத்தி இல்லைடா
பிறந்த மனுசன் எல்லாம் ஒன்னுதானடா

உலகம் இப்போ கொரானாவ
............ஒழிக்கத் தானே துடிக்குது
உங்களோட ஜாதி எல்லாம்
............ஒதுங்கித் தானே கிடக்குது
கோவில் எல்லாம் கூட்டமின்றி
.........முடங்கித் தானே கிடக்குது
கூச்சல் போட்ட கூட்டமெல்லாம்
........கூனிக் குறுகி நிக்குது

........(எஸ்ஸி எஸ்டின்னு...)

போதும் போதும் மக்கா- நீ
......புதுசா யோசி கிக்கா
சாகும் வாழ்வு மக்கா- உன்
...... சாதி என்ன கொக்கா?!

உன்னுள் என்னுள் ஓடுறது
.........ஒரே ரத்தம் தானே...
இன்னும் இங்கே போடுகிற
.......எல்லாம் சத்தம் வீணே...
சாதி என்னும் பேதமெல்லாம்
.......சண்டை மூட்ட தானே
நீதி இன்றிப் பேசுகின்ற
.......அந்தப் பேச்சுவீணே..

போதும் போதுண்டா போதும் விடுங்க டா
பொல்லா வேசமெல்லாம் போடாதீங்க டா
யாரும் யாருக்கும் அடிமை இல்லை டா
இன்னும் ஏதேதோப் பேசாதீங்க டா

✍️செ. இராசா

(சாதி இல்லா சமத்துவ சமுதாயம் உருவாகுமா யின் தமிழரை வெல்ல எவராலும் முடியாது)

No comments: