20/05/2020

நீ இன்றி வாடுகின்றேன்


அள்ளஅள்ளக் குறையாத
..............அமுத சுரபியாய்
அள்ளிஅள்ளிக் கொடுத்தவளே
..............அன்பு அன்னையே!

வந்துவந்து சோராத
.............அலையின் பயணமாய்த்
தந்துதந்து சோராத
..............கர்ண வள்ளலே!


சொல்லசொல்ல இனிக்கின்ற
..............கம்ப சந்தமாய்
மெல்லமெல்ல உளமாற்றித்
..............தந்த சொந்தமே!

வெல்லவெல்ல வருகின்ற
..............உள்ளக் கிளர்ச்சியாய்
நல்லநல்லக் கவிதந்த
..............கத்தார் கார்னிஷே...!

நீ இன்றி வாடுகின்றேன்

✍️செ. இராசா

(கத்தாரில் என் உணர்வோடு ஒன்றாய்க் கலந்த கடற்கரை இது. இதைப்பிரிந்திருக்கும் வேதனையை எப்படிச் சொல்வேன்?!)

No comments: