21/05/2020

மகாபாரதச் சுருக்கம் குறள் வெண்பாவில்

#மகாபாரதச்_சுருக்கம்
#குறள்_வெண்பாவில்

சந்திர வம்சத்து சந்தனு மன்னனுள்
வந்தது சஞ்சல வாழ்வு
1. #தொடக்கம்

மீனவ நங்கையில் வேட்கை மிகுந்திட
ஆனது சங்கடம் அன்று
2. #சந்தனு_சத்தியவதி_காதல்

கங்கைப் புதல்வனைக் காவலன் ஆக்கியே
நங்கைப் புதல்வனுக்கு நாடு
3. #பீஷ்மரின்_சபதம்_
#விசித்திவீரியன்_பதவியேற்ப

நடந்த செயலால் நலிந்த அரசன்
விடையின்றிப் போனானே வீடு
4. #சந்தனு_மரணம்

குடிகாக்கும் வேந்தன் குடியால் மடிய
குடிகாக்க வேண்டாமா கோன்?!
5. #விசித்திரவீரியன்_மரணம்

வியாச முனிவனின் விந்தைத் திறனால்
வியாபித்து விட்டது வேர்
6. #வியாசர்_வழியில்_புத்திரர்கள்

குருடாய்க் குறையாய்க் கொடுத்தது போக
ஒருவனைத் தந்தார் உவந்து
7.#திருதராஷ்டிரன்_பாண்டு_விதுரர்_பிறப்பு

கண்ணிலான் பிள்ளைகள் கௌரவர் நூறுக்கும்
கன்னனே கண்கண்ட காப்பு
8. #கௌரவர்களுடன்_கர்ணன்

பாண்டுவின் பிள்ளைகள் பாண்டவர் ஐவர்க்கும்
ஆண்டவர் கண்ணன் அரண்
9. #பாண்டவர்களுடன்_கண்ணன்

விதுரர் அறமும் விரயமாய்ப் போக
சதியால் விளைந்த சரிவு
10. #விதுரர்_அறிவுரை_வீண்

பகடை உருட்டிய பாவியின் ஆட்டம்
சகலர்க்கும் ஊதியது சங்கு
11. #சகுனியின்_சதியும்_விளைவும

அக்னியில் தோன்றிய அம்மணி சக்தியும்
அக்னி குணமே அறி
12. #பாஞ்சாலி

தர்மத்தின் வாழ்வினை சங்கடம் கவ்வினும்
கர்மமே வென்றது காண்
13. #முடிவு

✍️செ.இராசா

No comments: