25/05/2020

சினிமாவில் கதாநாயகர்களுக்கு அறிமுகப் பாடல்போல்

(சினிமாவில் கதாநாயகர்களுக்கு அறிமுகப் பாடல்போல் எனக்கு நானே எழுதியது. இது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் நமக்குலாம் வேற யாருங்க எழுதப்போறா?!! ஆனாலும் காலத்தை யார்தான் அறிவார்?!

சுய வரலாறாய் அமைந்த இப்பாடலைத் தயவுகூர்ந்து விளையாட்டுப் பிள்ளையின் ஆசையாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

(தொகையறா)

சீக்கிரமா ஜெயிக்கணும்னு
.........ஆசைப்பட்டேன் கடவுளே!
தீப்பொறிபோல் பற்றிடநான்
.........தூண்டிவிடு கடவுளே!
எல்லாத்தையும் எழுதுகிறேன்
........... ஏத்துக்கநீ கடவுளே!
இல்லாததை ஒதுக்குகிறேன்
...........எள்ளாதநீ கடவுளே!

ஆத்தாடி ஆத்தாடி #அம்மன்பட்டி ஆளு- இவன்
பார்த்தாலே பத்திக்கிற #பாகனேரித் தேரு
நாட்டாரும் நாடிவரும் #நகரம்பட்டி ஏறு- இவன்
வேற்றாளாய்ப் பார்க்காத #வீழனேரி வேரு?!

#ஒக்கூரு #சோழபுரம்
........... ஒன்னும் விடவில்லை- இவன்
#தெக்கூரு #சிவகங்கை
............ #தேவகோட்டை பிள்ளை
அப்படியே போனானே
.............அங்கிருந்து #தில்லை- அவன்
எப்படியோ போனாலும்
.............எல்லைதாண்ட வில்லை!

படிச்சு முடிச்சுப் பணிக்குப் போனால்
........படிச்சபடி இல்லை
அடிச்சுப் பிடிச்சு அடுத்துப் போனால்
........அதுவும்சரி இல்லை
கடன அடைக்கக் கடமை செஞ்சால்
........கடனுமடைய வில்லை
உடனே அதையும் உதறி விட்டால்
........உதவிவேறு இல்லை
அதுக்குத் தானே ஆசைப் பட்டான்
........அயல்நாட்டு எல்லை
அதுவும் தானே அமையவில்லை
.........அவனும்விட வில்லை
கடவுள் கொண்ட கருணையினால்
........கையில்வந்த வேலை
தடத்தப் பிடிச்சு தனிச்சதினால்
.........தகுதிதந்த மாலை
இருந்து இன்னும் எழுதுகின்றான்
.........இறைவனுக்கோர் ஓலை
வருமா என்று வணங்குகின்றான்
.........வரிகளுக்கோர் நாளை

✍️செ. இராசா

#சுயம்

No comments: