04/05/2020

#மது_அந்தாதி



#குடிமகனின் வேதனைகள் கூடிடும் போதில்
குடியாட்சி என்செய்யும் #கூறு
(1)

#கூறியசொல் கேட்காமல் கூற்றுவன் வேண்டுவோர்
மாறிட மாட்டார் #மனம்
(2)

#மனம்போல் நடக்கிற மக்களின் வேந்தன்
மனிதனே இல்லை; #மகான்
(3)

#மகான்கள் நிறைந்த வளமான நாட்டில்
மிகாமல் கிடைக்குமாம் #நீர்
(4)

#நீர்நாடி மன்றாடி நிற்போரை எண்ணியே
பார்போற்றச் செய்திட்டார் #பார்
(5)

#பார்க்கின்ற பார்வைக்கு பால்கூட கள்ளென்றால்
பார்வையினை என்னென்'பீர்' #கள்'
(6)

#கள்ளத் தனமாகக் கைமாறும் என்றெண்ணி
அள்ளிக் கொடுத்தாரோ #ஐ!
(7)

#ஐயகோ என்றோரே அய்யய்யோ என்றோரே
பையத் திறந்திட்டார் #பார்!
(8)

#பாருங்கள் சீக்கி'ரம்' பா'ரதம் வென்றிடும்
யாருக்கும் முன்னராய் #இங்கு
(9)

#இங்குள்ள வேந்தனை எப்படிப் போற்றலாம்?!
கொஞ்சி மகிழும் #குடி
(10)

✍️செ. இராசா

No comments: