09/05/2020

மறுக்கப்பட்ட ஆப்பிளின் மகத்துவம்


மறுக்கப்பட்ட ஆப்பிளின்
மகத்துவம் என்ன?!
தடுக்கப்பட்ட உண்மையின்
தாத்பரியம் என்ன?
இறைவனின் கருணையில்
இதற்கேன் விதிவிலக்கு?
மறைபொருள் பொதித்த
மர்மம்தான் என்ன?

அன்றைக்கு யோசித்த ஆதாம்போல்
இன்றைக்கும் யோசனையில்..
அறிவின் எல்லைக்கு அப்பால்
அறிகின்ற முயற்சியில்...

ஆராய்ச்சியில் தோற்று
அடிபட்டு விழும்போதுதான்
ஆழ்ந்து சுவாசிக்கிறது
இயற்கை....

ஒவ்வொரு முறையும்

✍️செ. இராசா

No comments: