25/12/2018

சுட்டும் விழிச்சுடரில்


சுட்டும் விழிச்சுடரில்
தொட்டுச்செல்லும் பெண்ணே- நீ
பட்டும்படா திருந்தால்- நான்
பட்டுப் போவேன் கண்ணே!

வெட்டும் விழிச்சுடரில்
கட்டிப்போடும் பெண்ணே- நீ
பற்றேயில்லா திருந்தால்- நான்
வெற்றாய்த் திரிவேன் கண்ணே!

தட்டும் விழிச்சுடரில்
சுட்டிப் பேசும் பெண்ணே- நீ
கவ்விக்கொள்ள மறுத்தால்- நான்
கவிதையில் வதைப்பேன் கண்ணே!

பற்றும் விழிச்சுடரில்
தொற்றிக்கொள்ளும் பெண்ணே- நீ
சுற்றிவிட நினைத்தால்- நான்
முற்றிலும் துறப்பேன் ..........உன்னையே!

நீ வேறு.... உலகம் வேறா?!!!

No comments: