29/12/2018

நவீன கவிதை



நவீன கவிதை பற்றிய புரிதலுக்காக என் அன்பு நண்பர் சத்யாவுடன் பேசிய சுவாரஸ்யமான உரையாடல்.....இதன் மூலம் அனைவருக்கும் நவீன கவிதை பற்றிய புரிதல் ஏற்படலாம் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு)

இராசா:

நண்பரே வணக்கம்.
இந்தக் கவிதை பாருங்கள்

முயற்சி-1

அவளை நான் சுற்றுவது ஒன்றும்
கேவலமல்ல...
அது உலகை அடைவதற்கான
ஒத்திகையே
.................
இது எப்படி?
இது இப்போது தோன்றியது நண்பரே
😍1
கவிதை சரியா?
உலகை வெல்வதற்கான
சரியாக இருக்குமா
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

"கேவலம்" அதற்கு வேறு வார்த்தையை பயன்படுத்தலாம்
தோன்றும்போது எழுதி
அனுப்புங்கள்
உங்களை கண்டறிந்து கொள்ளுங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இராசா:
முயற்சி-2

அவளின் பின்னால் சுற்றுவது ஒன்றும்
குற்றமல்ல
அது உலகை வெல்வதற்கான
ஒத்திகையே

இப்ப பாருங்க...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

நண்பரே
கவிதையை உருவாக்க முயலாதீர்
இந்த வரிகளுக்கு
சரியான வார்த்தை
உங்களுக்குள் தானாகவே உருவாகும்
😍1
பொறுமை
😍1
அசைபோட்டுக்கொண்டே இருங்கள்
அந்த வரிகளை
ஒரு மூன்று கவிதைகள் எழுதும் வரை
சிரமம் இருக்கும்
பிறகு இயல்பிலே மாற்றம் வந்துவிடும்
எனது அனுபவம் தான் இது.
கருப்பொருள் ஒன்று தான்
சொல்லும் விதத்தில் வித்தியாசம்
அதுதான் நவீனம்
😍1
நான் இப்படி தான் நினைக்கிறேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இராசா:
முயற்சி-3

நான் அவளை சுற்றுகிறேனாம்
“அவர்களுக்குத் தெரியுமா?!!”
நான் உலகைச் சுற்றும் முயற்சியில் இருக்கிறேனென்று

இப்ப பாருங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:
ஏன் சிரமபடுறீங்க..........வெயிட்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

சிரமப்படல
நான் மாற்றி அனுப்புறேன்
உடனே எப்படி வரும்
யாருக்கும் வராது

இதோ பிறந்துவிட்டது நவீன கவிதை

"ஒத்திகையேதுமின்றி
அவளைச் சுற்றியே
வலையை
பின்னிக்கொண்டிருக்கிறது
என் ஆன்மா.
அதை
சிறையென்று
அவள் நினைக்கையில்
உறைந்து விடுவது
உயிர் மட்டுமல்ல.

....
?"

உயிர் மட்டும் அல்ல
அடுத்தது என்ன சொல்ல வருகிறார்
இந்த கவிஞர் என்று
கவிதையை
படிக்கும் வாசகரிடம் விட்டுவிடவேண்டும்
அவருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ
அந்த மாதிரி புரிந்து கொள்வார்
உயிரே உறைந்து போச்சு னு சொல்றாரு
அதைவிட வேற என்ன இருக்கிறது

விடை.

நம் உணர்வு
நாம் உருவாக்கி வைத்துள்ள காதலின் பிம்பம்
etc etc கேட்ச்

கவிதை களை
பலவாறு
எழுதலாம்
பயிற்சி பயிற்சி பயிற்சி
கொஞ்சம் முயற்சி
கற்றுக் கொள்ள யாரிடமும் தயக்கம் காட்ட தேவையில்லை
சொல்லும் விதம் மாறியுள்ளது
நான் அப்படி தான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இராசா:

முயல்கிறேன் நண்பரே...நன்றி நன்றி...

(பொறுமையாய் சொல்லிக்கொடுத்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி)

படம் எடுத்த இடம்: பிரியா மெஸ், காரைக்குடி
— with Vasanthan.

No comments: