01/12/2018

உதடுகள் ஒட்டாது


தன்னோடு ஒட்டிடா ஒன்றிலே
இன்னல்கள் தன்னாலே தீண்டிடா

தீதொன்று கொண்டிலா உயிரிலே
யாதொன்று இன்னல்கள் சேர்ந்திடா..

இசையிலே இசைந்திடா உயிரிலே
இறையொலி உள்ளுக்குள் கேட்டிடா.,

ஆதியை உணர்ந்திடா உயிரிலே
ஆயுளின் காலங்கள் எதற்கடா?!

✍️செ. இராசா

No comments: