13/12/2018

அகப்பை_மூடனின்_குரல்



அகப்பை இங்கே கண்டவுடன்
அகப் பை உள்ளே உள்ளிருந்த
முகப்பைக் கிழித்து வருகின்ற
நினைப்பை இங்கே எழுதுகின்றேன்...

பானைத் தேனிலே அகப்பையைப்போல்
பாரதி சொன்ன உவமையைப்போல்
ஞான வகுப்பிலே மூடனைப்போல்
நானும் இருந்ததை எண்ணுகின்றேன்

அகநூல் எழுத்தை மாற்றாமல்
முகநூல் எழுதிடும் மூடனைப்போல்
அகத்தின் பையைத் திறக்காமல்
அகப்பை மூடனாய் இருந்துவிட்டேன்

எத்தனை எத்தனை பாடங்களை
எத்தனை முறைநான் கேட்டாலும்
எனக்குள் மாற்றம் காணாமல்
எத்தனை நாட்களைக் கழித்துவிட்டேன்

ஐயோ.... கொடுமை இதுவென்று
குய்யோ முறையென அழுவதிலே
இன்றொரு பயனில்லை என்றாலும்
இனியும் தொடர்ந்திட அனுமதியேன்...

✍️அகப்பை_மூடனின்_குரல்

No comments: