13/12/2018

நாம் எங்கே போகிறோம்?


நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கெல்லாம் தன்னுடைய பிறந்த நாள் என்னவென்றே தெரியாது. நம் அப்பாக்கள் பிறந்த நாளை அறிந்து வைத்திருந்தார்கள். நம்மை பிறந்த நாளன்று கோவில் போய் வரச்சொன்னார்கள். அவ்வளவே.....பிறந்த நாளுக்கென்று உடையெல்லாம் தனியாக வாங்கி தந்ததில்லை. சாக்கெலெட் மட்டும் கொடுத்துவிட்டு பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம்.

மேலும், முன்பெல்லாம் பிறந்த நாள் விழாவை அரசியல் தலைவர்களும், நடிகர்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். சாமானிய மக்களுக்கு பண்டிகைகள் மட்டுமே கொண்டாட்டமாக இருந்தது.

ஆனால், இன்று நிலைமை அப்படியா உள்ளது?!! அனைவரும் பிறந்த நாள் கொண்டாடுகிறோம். குழந்தைகளுக்காக என்று சொல்லிச்சொல்லி பெரியவர்கள் நடத்தும் ஆடம்பர விழாவாக மாறிவிட்டது. அது என்னமோ கேக் என்ற ஒன்றைக் கண்டிப்பாக வெட்டியே ஆக வேண்டுமாம். இல்லையென்றால் தெய்வக்குத்தம் ஆகிவிடும் என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்டோம்.

அதைவிடக் கொடுமை... இப்போது சில வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடைபெறுகிறது....என்னவென்றால் தங்கள் பிள்ளைகளுக்குப் பிறந்த நாள் வந்தால் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையோடு படிக்கும் மற்ற பிள்ளைகளைக் (மட்டும்) கொண்டுவந்து (McDonald போன்ற) உணவகங்களில் விடுமாறு சொல்கிறார்கள். பெற்றோர்கள் வெளியில் காத்திருந்து அழைத்துப்போக வேண்டும். இதெல்லாம் கேட்கும்போதே கோபம் வருகிறதல்லவா?!!

நான் கூட வட இந்தியர்களோ என்று நினைத்தால், அவர்கள் தமிழ்க்குடும்பத்தினராம் மேலும் தமிழ் சார்ந்த அறக்கட்டளைகள் வைத்துள்ளவர்களாம். அடக்கடவுளே..... இதுதான் தமிழறமா?!! “விருந்தோம்பல்” என்ற அதிகாரம் எல்லாம் இவர்கள் படித்துள்ளார்களா இல்லையா?!!

அவர்கள் கிடக்கட்டும்.... நீங்கள் போகலாமா? என்று நீங்கள் கேட்க வருவது எனக்கும் புரிகிறது. அதிகமுறை தவிர்த்திருந்தாலும் இம்முறை வற்புறுத்தலினால் என்னதான் நடக்கிறது என்று பார்க்கவே நாங்களும் சென்று காத்துக்கிடந்தோம். கொடுமை...(இதுவே முதலும் கடேசியும் என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டேன்)

பிள்ளைகளின் மனதில் ஒரு புதிய கலாச்சாரத்தை விதைத்து வருங்காலத்தை நாம் எங்கே கொண்டு போகிறோம்?!!!
(இந்த வெளிநாட்டுக் கடைக்காரன், பிள்ளைகளைக் குறி வைத்தே பல பரிசுகள் தந்து தன் கடையின் பெயரைக் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிக்கிறான் என்பதை உணர வேண்டாமா?!)

வேதனையுடன்....

✍️செ. இராசா

(நண்பர்களே,

கேக் வெட்டாமல் அதற்கு மாற்றாக என்ன செய்யலாம்?....ஒரு யோசனை சொல்லுங்களேன்)

No comments: