12/12/2018

#மீண்டும்_குழந்தையாவோம்_மனதில்




சினத்தை வைத்துக் கொண்டு
சீறுவதும் இல்லை!- நீ
மனத்தை சிதைத்துக் கொண்டு
மயங்குவதும் இல்லை!

ஒன்றை நினைத்துக் கொண்டு
உருகுவதும் இல்லை!- நீ
தன்னை வியந்து கொண்டு
தடுமாறுவதும் இல்லை!

உன்போல் இருந்துவிட்டால்
உலகத்தில் சண்டை இல்லை..
முன்போல் இருந்துவிட்டால்
எந்நாளும் தொல்லை இல்லை...

#மீண்டும்_குழந்தையாவோம்_மனதில்

No comments: